sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

500க்கும் மேற்பட்ட திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு

/

500க்கும் மேற்பட்ட திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு

500க்கும் மேற்பட்ட திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு

500க்கும் மேற்பட்ட திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு


ADDED : செப் 15, 2025 02:08 AM

Google News

ADDED : செப் 15, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்:தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களிடம் திருக்குறளை கொண்டுபோய் சேர்க்க மன்றங்கள் துவங்கப்படுகிறது. இதில், மாணவர்கள் திருக்குறள் மனப்பாடம் செய்ய பல்வேறு பயிற்சியளிக்கப்படுகிறது.

ராசிபுரம் பாரதிதாசன் சாலையில் உள்ள அரசு பள்ளியில் இதற்கான மன்றம் துவங்கப்பட்டுள்ளது. ராசிபுரம் தமிழ் கழகத்தின் செயலாளர் பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி மன்றத்தை துவக்கி வைத்து பேசினார்.

இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை பள்ளி கல்லுாரி மாணவர்களிடத்தில் கொண்டுசெல்ல மன்றங்கள் துவக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் மாணவ, மாணவியருக்கு திருக்குறள் பயிற்சி அளிக்கப்படும். 30 வாரங்கள் நிறைவில், 500க்கும் மேற்பட்ட திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவ, மாணவியருக்கு, 10,000 ரூபாய், 500 திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு, 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றார்.

கருத்தாளர்களாக தட்சிணாமூர்த்தி, மனோஜ்குமார், தெய்வசிகாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாட்டை தலைமை ஆசிரியர் பாரதி செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us