sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

உற்பத்தி சரிவு; ஈஸ்டர் விரதம் எதிரொலி கறிக்கோழி விலை 4 நாளில் கிலோவுக்கு ரூ.17 உயர்வு

/

உற்பத்தி சரிவு; ஈஸ்டர் விரதம் எதிரொலி கறிக்கோழி விலை 4 நாளில் கிலோவுக்கு ரூ.17 உயர்வு

உற்பத்தி சரிவு; ஈஸ்டர் விரதம் எதிரொலி கறிக்கோழி விலை 4 நாளில் கிலோவுக்கு ரூ.17 உயர்வு

உற்பத்தி சரிவு; ஈஸ்டர் விரதம் எதிரொலி கறிக்கோழி விலை 4 நாளில் கிலோவுக்கு ரூ.17 உயர்வு


ADDED : பிப் 12, 2024 11:57 AM

Google News

ADDED : பிப் 12, 2024 11:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ஒரே வாரத்தில், 2 கோடி கிலோ உற்பத்தி சரிவு காரணமாகவும், விரைவில் ஈஸ்டர் விரதம் துவங்குவதாலும், கறிக்கோழி கொள்முதல் விலை நான்கு நாளில், 17 ரூபாய் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இவற்றில் தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) சார்பில் தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. உற்பத்தி குறைவு, நுகர்வு அதிகரிக்கும் போது, விலை உயர்வதும், உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கை.

கடந்த, 1ல் ஒரு கிலோ, 107 ரூபாய்க்கு விற்றது. தொடர்ந்து ஏற்றம், இறக்கம் காணப்பட்ட நிலையில், 7ம் தேதி, 103 ரூபாய்; 8ம் தேதி ௧௧௩ ரூபாய்; 9ம் தேதி 118 ரூபாயாக உயர்ந்தது.

இந்நிலையில் நேற்று மேலும், 2 ரூபாய் அதிகரித்து, ஒரு கிலோ, 120 ரூபாயாக உயர்ந்தது. அதாவது கொள்முதல் விலை, நான்கு நாட்களில், 17 ரூபாய் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:

பொங்கல் பண்டிகையின்போது, விற்பனை இருக்காது என்பதை கருத்தில் கொண்டு, ஐந்து வாரத்துக்கு முன்பே, நான்கு வாரம் கோழி குஞ்சு விடுவதை நிறுத்தி விட்டனர். அதனால், வரும், வரும், 16ம் தேதி கறிக்கோழி தட்டுப்பாடு ஏற்படும். வாரம், 4.50 கோடி கிலோ உற்பத்தியான நிலையில், தற்போது, 2 கோடி கிலோ உற்பத்தி குறைந்துள்ளது. விரைவில் ஈஸ்டர் விரதம் துவங்க உள்ளதால், விற்பனை சரிவு ஏற்படும். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், உற்பத்தியும் கோழியின் எடை, 2 கிலோ மற்றும் அதற்கும் கீழ் வர வாய்ப்புள்ளது. இதனால் கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us