/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சொத்து தகராறு: தந்தையை வெட்டி கொன்ற மகன் கைது
/
சொத்து தகராறு: தந்தையை வெட்டி கொன்ற மகன் கைது
ADDED : அக் 12, 2024 07:33 AM
பள்ளிப்பாளையம்: மொளசி அருகே, சொத்து தகராறில் தந்தையை வெட்டி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே, மொளசி அடுத்த வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளை-யப்பன், 70; விவசாயி. இவரது இளைய மகன் தாமோதரன், 47; லாரி டிரைவர். தந்தை, மகன் இருவருக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல், நேற்று முன்தினம் இரவும், தந்தை, மகன் இருவருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது.
அப்போது நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த தாமோதரன், அருகில் கிடந்த அரிவாளை எடுத்து இளையப்பன் தலையில் வெட்டினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த மொளசி போலீசார், நேற்று
காலை, தாமோதரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சொத்து தகராறில், தந்தையை மகனே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.