/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மா.திறனாளிகள் 4 பேருக்கு ரூ.3.50 லட்சத்தில் செயற்கை கால்கள், காதொலி கருவி வழங்கல்
/
மா.திறனாளிகள் 4 பேருக்கு ரூ.3.50 லட்சத்தில் செயற்கை கால்கள், காதொலி கருவி வழங்கல்
மா.திறனாளிகள் 4 பேருக்கு ரூ.3.50 லட்சத்தில் செயற்கை கால்கள், காதொலி கருவி வழங்கல்
மா.திறனாளிகள் 4 பேருக்கு ரூ.3.50 லட்சத்தில் செயற்கை கால்கள், காதொலி கருவி வழங்கல்
ADDED : அக் 29, 2024 01:10 AM
மா.திறனாளிகள் 4 பேருக்கு ரூ.3.50 லட்சத்தில்
செயற்கை கால்கள், காதொலி கருவி வழங்கல்
நாமக்கல், அக். 29-
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 4 பேருக்கு, 3 லட்சத்து, 51,480 ரூபாய் மதிப்பில், செயற்கை கால்கள், காதொலி கருவிகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 294 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர் பரிசீலனை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 4 பேருக்கு, 3 லட்சத்து, 51,480 ரூபாய் மதிப்பில், செயற்கை கால்கள், காதொலி கருவிகளை வழங்கினார். முன்னதாக, கலெக்டர் உமா தலைமையில், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வார உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். டி.ஆர்.ஓ., சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.