sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாற்றுத்திறனாளி, முதியோர் ஓட்டுப்போட 15 ஒன்றியங்களில் அரசு வாகனம் ஏற்பாடு

/

மாற்றுத்திறனாளி, முதியோர் ஓட்டுப்போட 15 ஒன்றியங்களில் அரசு வாகனம் ஏற்பாடு

மாற்றுத்திறனாளி, முதியோர் ஓட்டுப்போட 15 ஒன்றியங்களில் அரசு வாகனம் ஏற்பாடு

மாற்றுத்திறனாளி, முதியோர் ஓட்டுப்போட 15 ஒன்றியங்களில் அரசு வாகனம் ஏற்பாடு


ADDED : ஏப் 20, 2024 07:22 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய, 6 சட்டசபை தொகுதிகளில், 1,628 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள், 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் ஓட்டு போடுவதற்கு ஏதுவாக, ஓட்டுச்சாவடிகளில் சாய்வு தள வசதி, வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு நீர் கரைசல், பொதுமக்களின் நிழலுக்காக சாமியான பந்தல், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, முதலுதவி வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ஓட்டுபோடுவதற்கு வசதியாக, 15 ஒன்றிய அலுவலகங்களில், 35 அரசு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த வசதியை பெறுவதற்கு, '1950' என்ற எண்ணில் உதவி மையத்திற்கும், 1800 425 7021 என்ற கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்பு கொண்டவர்களை, ஓட்டுச்சாவடிக்கு சென்று வர வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us