sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விளம்பர போஸ்டர் ஒட்டும் இடமான பி.டி.ஓ., அலுவலகம்: சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி

/

விளம்பர போஸ்டர் ஒட்டும் இடமான பி.டி.ஓ., அலுவலகம்: சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி

விளம்பர போஸ்டர் ஒட்டும் இடமான பி.டி.ஓ., அலுவலகம்: சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி

விளம்பர போஸ்டர் ஒட்டும் இடமான பி.டி.ஓ., அலுவலகம்: சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி


ADDED : பிப் 12, 2024 11:26 AM

Google News

ADDED : பிப் 12, 2024 11:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: பி.டி.ஓ., அலுவலக நுழைவு வாயில், போஸ்டர் ஒட்டும் இடமாக மாறி உள்ளது. அவற்றை தவிர்க்க, அரசு நலத்திட்டங்கங்களை விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

நாமக்கல் - மோகனுார் சாலையில், பி.டி.ஓ., அலுவலகம் உள்ளது. இங்கு, பல்வேறு பணிகளுக்காக, ஒன்றியம் முழுவதும் இருந்து, அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வந்து செல்கின்றனறர். அவர்களுக்கு, தங்களது விளம்பரம் சென்றடைய வேண்டும் என்பதற்காக, அரசியல் கட்சிகளும், பொது அமைப்பினரும், விளம்பரம், வாழ்த்து போஸ்டர்களை, பி.டி.ஓ., அலுவலக நுழைவு வாயிலில் ஒட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவற்றை அவ்வப்போது, பி.டி.ஓ., அலுவலக பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். ஆனால், தொடர்ந்து, போஸ்டர் ஒட்டும் கலாசாரத்தை பலரும் பின்பற்றி வருகின்றனர். தற்போது, பி.டி.ஓ., அலுவலக நுழைவு வாயில், போஸ்டர் ஒட்டும் இடமாக மாறி உள்ளது. இது, சமூக ஆர்வலர்களுக்கு கடும் அதிர்ச்சியும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, பொதுமக்கள் சிலர் கூறியதாவது:

பொதுமக்கள், தங்களுக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் அரசு நலத்திட்டங்களை பெறுவதற்காக, பி.டி.ஓ., அலுவலகம் வந்து செல்கின்றனர். ஆனால், இங்குள்ள நுழைவு வாயிலில், போஸ்டர் ஒட்டி அசிங்கப்படுத்துகின்றனர். அவற்றை தவிர்க்கும் வகையில், நுழைவு வாயிலில் அரசு நலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், எழுதி வைத்தால், உபயோகமாக இருப்பதுடன், அரசியல் கட்சி உள்ளிட்டோர் போஸ்டர் ஒட்டுவதை தடுக்க முடியும். அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள, பி.டி.ஓ., மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us