sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே ஆக்கிரமிப்பு நிரந்தர தீர்வு ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

/

ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே ஆக்கிரமிப்பு நிரந்தர தீர்வு ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே ஆக்கிரமிப்பு நிரந்தர தீர்வு ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே ஆக்கிரமிப்பு நிரந்தர தீர்வு ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை


ADDED : ஆக 14, 2025 03:35 AM

Google News

ADDED : ஆக 14, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆக்கிரமிப்பு மற்றும் வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதை தவிர்க்க, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ப.வேலுார் பஸ் ஸ்டாண்டிலிருந்து நாமக்கல், மோகனுார், தொட்டியம், முசிறி, சேலம், திருச்செங்கோடு, ஈரோடு, கோவை, கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து உள்ளது. மேலும், சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு செல்லும் வகையில் அரசு டவுன் பஸ் மற்றும் மினி பஸ் போக்குவரத்து உள்ளது. பஸ் ஸ்டாண்ட் வளாகம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். பஸ் ஸ்டாண்ட் உள்ளே, விவசாயிகள் சங்கத்தின் பூ ஏல சந்தை உள்ளது.

இதனால், தினந்தோறும் விவசாயிகள் வந்து செல்லும் அவசியத்தில் உள்ளனர். காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அதிகளவில் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றனர்.

போக்குவரத்து பாதிப்பு குறித்து, ப.வேலுார் டவுன் பஞ்., நிர்வாகம், சில மாதங்களுக்கு முன் ஆய்வு செய்தது. அப்போது, பஸ்கள், பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று, வெளியே வரும்போது ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தெரிந்தது. இதையடுத்து, பஸ் ஸ்டாண்ட் முன் உள்ள அக்கிரமிப்புகளை அகற்றினர். தற்போது மீண்டும், பஸ் ஸ்டாண்ட் பின்புறம் பொதுமக்கள் செல்லும் பாதை படிக்கட்டுகளை முழுவதுமாக ஆக்கிரமித்து பழக்கடை, ஓட்டல், டீக்கடை அமைத்து தார்ச்சாலை வரை ஆக்கிரமித்துள்ளனர். இதனால், பஸ் வெளியே வரும்போது திரும்ப முடியாமல் டிரைவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

சில மாதங்களுக்கு முன், போக்குவரத்து நெரிசலால் இரண்டு பஸ்களுக்கு இடையே சிக்கி உயிர் பலி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தி, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us