/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
8 தாலுகா ஆபீசில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்: 169 மனுக்களுக்கு தீர்வு
/
8 தாலுகா ஆபீசில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்: 169 மனுக்களுக்கு தீர்வு
8 தாலுகா ஆபீசில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்: 169 மனுக்களுக்கு தீர்வு
8 தாலுகா ஆபீசில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்: 169 மனுக்களுக்கு தீர்வு
ADDED : செப் 14, 2025 04:44 AM
நாமக்கல்:மாவட்டத்தில், 8 தாலுகா அலுவலகத்தில் நடந்த பொது வினி-யோக திட்ட குறைதீர் முகாமில், 169 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. அவை அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தின் மூலம், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல் நெம்பர் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள், சேவைகளை அனைத்து தரப்பு மக்க-ளுக்கும் வழங்கவும், ரேஷன் கார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், மாதந்தோறும், பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார், குமாரபாளையம் ஆகிய, எட்டு தாலுகா அலுவல-கத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. அந்தந்த பகுதி வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமை வகித்தனர். நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தில், தனி தாசில்தார் முத்துக்குமார் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்-றுக்கொண்டார்.
மாவட்டம் முழுவதும், 8 தாலுகாவில் நடந்த பொதுவினியோக திட்ட குறைதீர் முகாமில், பொதுமக்கள் பலரும் வந்து, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் மொபைல் எண் பதிவு குறித்து புகார் மனு அளித்தனர். மொத்தம், 169 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவை அனைத்துக்கும் தீர்வு காணப்-பட்டது.