sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 586 பயனாளிகளுக்கு ரூ.1.14 கோடியில் நலத்திட்டம்

/

கொல்லிமலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 586 பயனாளிகளுக்கு ரூ.1.14 கோடியில் நலத்திட்டம்

கொல்லிமலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 586 பயனாளிகளுக்கு ரூ.1.14 கோடியில் நலத்திட்டம்

கொல்லிமலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 586 பயனாளிகளுக்கு ரூ.1.14 கோடியில் நலத்திட்டம்


ADDED : பிப் 09, 2025 07:03 AM

Google News

ADDED : பிப் 09, 2025 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: கொல்லிமலையில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 586 பயனாளிகளுக்கு, 1.14 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கொல்லிமலை, வாழவந்திநாடு பஞ்சாயத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், 586 பயனாளிகளுக்கு, 1.14 கோடி ரூபாயில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

அரசு அலுவலகங்களுக்கு சென்று, பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி வந்தனர். தற்போது, அரசு அதிகா-ரிகளே நேரடியாக வந்து பொதுமக்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை நிறைவேற்றி வரு-கின்றனர். இந்த சிறப்பு முகாமில், 586 பயனாளிகளுக்கு, 1.14 கோடி ரூபாயில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பழங்குடியினர் நலத்துறை சார்பில், 200 பேருக்கு நலவா-ரிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இனிவரும் மாதங்களில், கொல்லிமலை பகுதியில் ஆரியூர் நாடு, செல்லுார்நாடு, வளப்பூர் நாடு, வாழவந்திநாடு, வாழவந்திகோம்பை உள்ளிட்ட, 5 ஊராட்சி-களில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அப்பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. எனவே, அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

நாமக்கல் ஆர்.டி.ஓ., பார்த்தீபன், மகளிர் திட்ட இயக்குனர் செல்-வராசு, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, சமூக பாது-காப்பு திட்ட உதவி கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us