sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பகலில் பெய்த மழை வியாபாரிகள் பாதிப்பு

/

பகலில் பெய்த மழை வியாபாரிகள் பாதிப்பு

பகலில் பெய்த மழை வியாபாரிகள் பாதிப்பு

பகலில் பெய்த மழை வியாபாரிகள் பாதிப்பு


ADDED : நவ 15, 2024 02:20 AM

Google News

ADDED : நவ 15, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பகலில் பெய்த மழை

வியாபாரிகள் பாதிப்பு

குமாரபாளையம், நவ. 15-

குமாரபாளையத்தில், சாலையோர கடைகள் உள்ளிட்ட இதர கடைகள் வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. வெயிலும் அடித்துக்கொண்டு இருந்தது. திடீரென வானில் கரு மேகங்கள் சூழ்ந்து நேற்று மதியம், 2:30 மணியளவில் கன மழை பெய்தது. இந்த மழை இரண்டு மணி நேரம் நீடித்தது. இதனால் சாலையோர கடை வியாபாரிகள் உள்ளிட்ட பலரும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர். சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, கோம்புபள்ளத்தில் அதிகளவில் மழை நீர் சென்றது. திடீர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

* நேற்று காலை முதல், நாமகிரிப்பேட்டையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம், 1:30 மணியளவில் காற்றுடன் மழை பெய்தது. நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஒடுவன்குறிச்சி, வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் துாறல் மழை பெய்தது. 20 நிமிடத்துக்கு மேல் மழை பெய்தது. சில இடங்களில் மாலை வரை சாரல் மழை பெய்தது.






      Dinamalar
      Follow us