sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலை வெண்டாங்கியில் தரைப்பாலத்தை மூழ்கடித்த மழை

/

கொல்லிமலை வெண்டாங்கியில் தரைப்பாலத்தை மூழ்கடித்த மழை

கொல்லிமலை வெண்டாங்கியில் தரைப்பாலத்தை மூழ்கடித்த மழை

கொல்லிமலை வெண்டாங்கியில் தரைப்பாலத்தை மூழ்கடித்த மழை


ADDED : டிச 02, 2025 02:38 AM

Google News

ADDED : டிச 02, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம், தொடர் மழையால், வெண்டாங்கியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் தொடர் மழை பெய்து வருவதால், அங்குள்ள காட்டாறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், அங்குள்ள நீர் வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வனப்பகுதியில் உள்ள ஓடைகள் வழியாக வெளியேறும் தண்ணீர் முழுவதும், கொல்லிமலை அடிவார பகுதியில் உள்ள காரவள்ளி பெரிய ஆற்றுக்கு சென்றடைகிறது.

இந்நிலையில், வெண்டாங்கியில் இருந்து பள்ளம்பாறை செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீர் பாய்ந்தோடுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பள்ளி குழந்தைகள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும், அந்த தரைப்பாலத்தை கடந்து செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, அப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us