/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் அரசு கலை கல்லுாரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
ராசிபுரம் அரசு கலை கல்லுாரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ராசிபுரம் அரசு கலை கல்லுாரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ராசிபுரம் அரசு கலை கல்லுாரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 13, 2024 06:54 AM
ராசிபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ராசிபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ராசிபுரம், ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பேராசிரியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நுழைவாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், எம்.பி.எல்., பி.எச்.டி., முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.