/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரேஷன் குறைதீர் முகாம் 120 மனுக்களுக்கு தீர்வு
/
ரேஷன் குறைதீர் முகாம் 120 மனுக்களுக்கு தீர்வு
ADDED : டிச 15, 2024 03:09 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வது மற்றும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்க மாதந்தோறும், பொது வினியோகத்திட்ட குறை-தீர்க்கும் முகாம் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இம்மாதத்திற்கான பொது வினியோக திட்ட குறை-தீர்க்கும் முகாம், மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார் மற்றும் குமாரபாளையம் ஆகிய, 8 தாலுகா அலுவல-கங்களில், நேற்று நடந்தது.அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடந்த முகாமில், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் எண் மாற்றம், திருத்தம், புகைப்படம் மாற்றம் என, பல்வேறு மனுக்கள் அளிக்-கப்பட்டன.
நாமக்கல் தாலுகாவில், வட்ட வழங்கல் அலுவலர் கோவிந்த-ராஜூ தலைமை வகித்தார். அதில், 15 மனுக்கள் அளிக்கப்பட்-டன. அவற்றிற்கு உடனடி தீர்வு காணப்பட்டது. அதேபோல், மாவட்டம் முழுவதும், நடந்த முகாமில், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் எண் மாற்றம், திருத்தம் உள்-பட, 120 மனுக்கள் வரப்பெற்றன. அவை அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டது.