/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரேஷன் குறைதீர் முகாம் 160 மனுக்களுக்கு தீர்வு
/
ரேஷன் குறைதீர் முகாம் 160 மனுக்களுக்கு தீர்வு
ADDED : டிச 14, 2025 08:20 AM
நாமக்கல்: ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாமில், மாவட்-டத்தில் உள்ள, 8 தாலுகா அலுவலகத்தில், 160 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோக திட்டம் மூலம், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன்கார்டு கோருதல், மொபைல் போன் எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை, நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி மேற்கொள்ள, பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், ஒவ்வொரு மாதமும், இரண்டாவது சனிக்கிழமை நடத்தப்படுகிறது.
அதின்படி, இம்மாதத்திற்கான பொது வினியோ-கத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், மாவட்-டத்தில், நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்த-மங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார், குமாரபாளையம் என, எட்டு தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் நடந்தது. அந்தந்த வட்ட வழங்கல் தாசில்தார்கள் தலைமை வகித்தனர்.
நாமக்கல் தாலுகாவில், வட்ட வழங்கல் தாசில்தார் சுந்தரவள்ளி தலைமையில் நடந்த முகாமில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், மொபைல் போன் சேர்த்தல் குறித்து, 23 மனுக்களை அளித்-தனர். மாவட்டம் முழுவதும், 8 தாலுகாவில் நடந்த முகாமில், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் போன் எண் மாற்றம், திருத்தம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் என, மொத்தம், 160 மனுக்கள் வரப்பெற்-றன. அவை அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டன.

