sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைப்பு

/

வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைப்பு

வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைப்பு

வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைப்பு


ADDED : அக் 18, 2025 01:36 AM

Google News

ADDED : அக் 18, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில், ஆண்டுதோறும் நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இதனை பயன்படுத்தி சேலம், நாமக்கல் மாவட்டத்தில், 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. பள்ளிப்பாளையத்தில் மோளகவுண்டம்பாளையம், எலந்தகுட்டை, சின்னார்பாளையம், தெற்குபாளையம், களியனுார், சமயசங்கிலி, ஆலாம்பாளையம், புதுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில், 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

இந்தாண்டு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து பாசனத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. வாய்க்காலில் டிச., 31 வரை தண்ணீர் வரும். வாய்க்காலில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், விவசாயிகள் நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குமாரபாளையம் நீர்வளத்துறை அதிகாரி கூறுகையில், 'மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் பாசனத்திற்கு, 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது பருவமழை பெய்து வருவதால், தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு வாய்க்காலில், 300 கன அடி தண்ணீர் வருகிறது,' என்றனர்.






      Dinamalar
      Follow us