sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பச்சுடையாம்பட்டி பஞ்., நுாலகத்திற்கு நிரந்தர பணியாளர் நியமிக்க கோரிக்கை

/

பச்சுடையாம்பட்டி பஞ்., நுாலகத்திற்கு நிரந்தர பணியாளர் நியமிக்க கோரிக்கை

பச்சுடையாம்பட்டி பஞ்., நுாலகத்திற்கு நிரந்தர பணியாளர் நியமிக்க கோரிக்கை

பச்சுடையாம்பட்டி பஞ்., நுாலகத்திற்கு நிரந்தர பணியாளர் நியமிக்க கோரிக்கை


ADDED : ஜூன் 30, 2024 02:08 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

‍சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அருகே, பச்சுடையாம்பட்டி பஞ்., நுாலகத்திற்கு நிரந்தர பணியாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

சேந்தமங்கலத்தையொட்டி, பச்சுடையாம்பட்டி பஞ்., உள்ளது. இங்குள்ள மக்கள் மற்றும் அருகில் உள்ள சேந்தமங்கலம் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், கடந்த, 2021-22ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், இங்கிருந்த நுாலகத்தை பல லட்சம் ரூபாய் செலவில் மறு சீரமைப்பு செய்து, ஏராளமான புத்தகங்கள் வைக்கப்பட்டன.

ஆனால், இந்த நுாலகத்திற்கு நிரந்தர பணியாளர் நியமிக்காததால், நுாலகத்தை முறையாக திறப்பதில்லை. இதனால், வாசகர்கள் பயன்படுத்துவது குறைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:

இந்த நுாலகத்தில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. ஆனால், நிரந்தர பணியாளர் இல்லாததால் பஞ்.,ல் பணியாற்றும் ஒருவர் நுாலகத்தை திறந்து வைத்து விட்டு சென்று விடுகிறார். பின், வந்து கதவை அடைத்து செல்கிறார். இதனால், வாசகர்கள் படிப்பது குறைந்துள்ளது. நிரந்தர பணியாளர் நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us