/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பயணிகள் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை
/
பயணிகள் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை
ADDED : மே 03, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, பருத்திப்பள்ளி சமத்துவபுரம் பகுதியில், 100 குடும்பங்களில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் இதுவரை, பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இங்குள்ள மாணவர்கள், பொதுமக்கள் வெப்பம் தாங்க முடியாமல் சாலையில் நின்று சிரமப்படுகின்றனர். எனவே, பயணிகள் நிழற்கூடம் அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.