sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தார்ச்சாலை அமைக்கும் பணி; விரைந்து முடிக்க கோரிக்கை

/

தார்ச்சாலை அமைக்கும் பணி; விரைந்து முடிக்க கோரிக்கை

தார்ச்சாலை அமைக்கும் பணி; விரைந்து முடிக்க கோரிக்கை

தார்ச்சாலை அமைக்கும் பணி; விரைந்து முடிக்க கோரிக்கை


ADDED : பிப் 05, 2025 07:15 AM

Google News

ADDED : பிப் 05, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், அலங்காநத்தம் பஞ்., அரசு உயர்நிலைப்பள்ளியில் இருந்து புதுக்கோட்டை பஞ்., வெட்டுக்காடு வரை செல்லும், 2 கி.மீ., துார சாலை உள்ளது. இந்த சாலையை விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவியர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை போடப்பட்டதால், ஜல்லிகள் பெயர்ந்து கரடு முரடாக காணப்பட்டது. இதனால் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, இந்த சாலையை புதுப்பிப்பதற்காக சாலையை வெட்டி, ஜல்லிக்கற்கள் கொட்டினர். ஆனால், பல நாட்களாக அப்படியே விடப்பட்டுள்ளதால், மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us