/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
5 ஆண்டுக்கு ஒருமுறை மானியத்தில் சொட்டுநீர் குழாய் வழங்க கோரிக்கை
/
5 ஆண்டுக்கு ஒருமுறை மானியத்தில் சொட்டுநீர் குழாய் வழங்க கோரிக்கை
5 ஆண்டுக்கு ஒருமுறை மானியத்தில் சொட்டுநீர் குழாய் வழங்க கோரிக்கை
5 ஆண்டுக்கு ஒருமுறை மானியத்தில் சொட்டுநீர் குழாய் வழங்க கோரிக்கை
ADDED : பிப் 16, 2025 03:46 AM
புதுச்சத்திரம்: நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம், பரமத்தி வேலுார், சேந்-தமங்கலம், மோகனுார் உள்ளிட்ட யூனியன்களில், சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளனர். வெள்ளை கிழங்கு, முள்வேலி என, இரண்டு ரகங்களில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது.
மிகக்குறைந்த தண்ணீர் தேவைப்படும் பயிர் என்பதால், விவசா-யிகள் இந்த மரவள்ளிக்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மர-வள்ளி செடிகள், பாத்திகள் அமைத்து தண்ணீர் பாய்ச்சினால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், மத்திய, மாநில அர-சுகள் வழங்கும், 95 சதவீத மானியத்தில், 7 ஆண்டுக்கு ஒரு-முறை சொட்டு நீர் பாசனம் அமைத்து மரவள்ளி நடவு செய்யப்ப-டுகிறது.
ஆனால், இந்த சொட்டுநீர் குழாய்கள், 5 ஆண்டுகள் கூட பயன்-படுத்த முடியாமல் போவதால், விவசாயிகள் பணம் கொடுத்து மீண்டும் சொட்டுநீர் குழாய்கள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு மானிய விலையில், 5 ஆண்டுக்கு ஒருமுறை செட்-டுநீர் குழாய்கள் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, புதுச்சத்திரத்தை சேர்ந்த விவசாயி கந்தசாமி கூறிய-தாவது:
சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளி பயிரிட்டுள்ளோம். கடந்த, 2019ல், ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு மானியத்தில் மரவள்ளி பயி-ரிட சொட்டுநீர் குழாய்கள் கொடுத்தனர். ஆனால், 5 ஆண்டுகள் கூட முடியாத நிலையில், குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வரவில்லை. எனவே, அரசு, 5 ஆண்டுகள் முடிந்த மர-வள்ளி விவசாயிகளுக்கு, சொட்டுநீர் குழாய்கள் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.