sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க முதல்வருக்கு கோரிக்கை

/

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க முதல்வருக்கு கோரிக்கை

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க முதல்வருக்கு கோரிக்கை

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க முதல்வருக்கு கோரிக்கை


ADDED : டிச 28, 2024 02:16 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஆசிரியர் களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்-டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக முதல்வ-ருக்கு மனு அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரி-யர்களின் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு முன்னாள் முதல்வர் அண்ணாதுரை ஆட்சியில் இருந்து வழங்கப்பட்டு வந்-தது. இந்நிலையில், கடந்த ஆட்சியில் இது நிறுத்தப்பட்டது.

அதற்கு பதில், மத்திய அரசு வழங்கும் ஒருமுறை ஊக்க ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், தமிழகம் முழு-வதும், 12,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 2020 மார்ச், 10க்கு முன், உயர் கல்வி முடித்து இன்னும் ஊக்க ஊதிய உயர்வை பெறாமல் உள்ளனர்.

அதில், ஏறக்குறைய, 5,000 ஆசிரியர்கள் மதுரை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றியும் பெற்றுள்ளனர்.

தனி நீதிபதி மற்றும் இருநபர் அமர்வில் தீர்ப்பை ஆசிரியர்க-ளுக்கு சாதகமாக பெற்றுள்ளனர். இதற்கிடையில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு

எதிராக, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய உள்ள-தாக தெரிகிறது. இதனால், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை காலத்து உயர் கல்விக்கான ஊக்க ஊதியம், பழைய முறையில் நமக்கு கிடைக்கும் என்று காத்திருந்த ஆயிரக்கணக்கான ஆசிரி-யர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கும் விசயத்தில், தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யாமல், தற்போ-தைய உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, ஊக்க ஊதிய உயர்வை அனும-தித்து உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us