/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு
/
கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு
ADDED : அக் 26, 2024 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, காடச்சநல்லுாரை சேர்ந்த விவசாயி பெருமாள்; இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நி-லையில், நேற்று மாலை அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு
ஒன்று, 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து வெப்படை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த பசு மாட்டை
கயிறு கட்டி உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்ப-டைத்தனர்.