/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரிசி கடத்தல் வழக்கு; 2 வாலிபருக்கு குண்டாஸ்
/
அரிசி கடத்தல் வழக்கு; 2 வாலிபருக்கு குண்டாஸ்
ADDED : அக் 21, 2024 07:26 AM
நாமக்கல்: ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, நாமக்கல் மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், 4,100 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட கீழபாலபட்டியை சேர்ந்த வேலுசாமி மகன் ராகுல், 24, ராஜேந்திரன் மகன் ரஞ்சித்குமார், 24 ஆகிய இருவரையும், கோவை மண்டல எஸ்.பி., பாலாஜி சரவணன் பரிந்துரைப்படி, நாமக்கல் கலெக்டர் உமா, குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உமா, வாலிபர்கள் இருவரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தார்.