/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெள்ளப்பெருக்கால் ஆற்றில் இறங்க தடை
/
வெள்ளப்பெருக்கால் ஆற்றில் இறங்க தடை
ADDED : ஜூலை 28, 2025 04:04 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட காவிரி ஆற்றங்கரையோ-ரத்தில் அக்ரஹாரம், சந்தைபேட்டை, ஜனதா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் படித்துறை உள்ளது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர், தினமும் இந்த படித்துறைக்கு குளிக்-கவும், துணி துவைக்கவும் வருகின்றனர். தற்போது, ஆற்றில் தண்ணீர வரத்து அதிகரித்துள்ளதால், ஆற்றங்கரையோரம் அமைந்-துள்ள படித்துறைகளில் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிப்பாளையம் பகுதியில் ஆற்றங்கரையோ-ரத்தில் நகராட்சி சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், 'காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிக-மாக வந்து கொண்டிருப்பதால், பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது' என, எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.