/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அதிகாரிகள் போல் நடித்து ரூ.50,000 'ஆட்டை': 2 பேர் கைது
/
அதிகாரிகள் போல் நடித்து ரூ.50,000 'ஆட்டை': 2 பேர் கைது
அதிகாரிகள் போல் நடித்து ரூ.50,000 'ஆட்டை': 2 பேர் கைது
அதிகாரிகள் போல் நடித்து ரூ.50,000 'ஆட்டை': 2 பேர் கைது
ADDED : செப் 21, 2024 03:12 AM
எலச்சிபாளையம்: வெண்ணந்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று முன்தினம் மாலை இருவர் பொலீரோ காரில் தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்-கொண்டு, சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்தனர். அவர்களை பிடித்து வெண்ணந்துார் போலீசார் விசாரணை நடத்ததினர்.
அப்போது, சேலம் மாவட்டம், பழனிசாமி நகர், சன்னியாசி-குண்டு பகுதியை சேர்ந்த அய்யனார், 42, சேலம் மாவட்டம், தெற்-குகாடு, வெள்ளாளகுண்டம் ரவி, 41, என்பதும் தெரியவந்துள்-ளது. மேலும், கடந்த, 18ல், மல்லசமுத்திரம் அருகே நாகர்பாளை-யத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் நாங்கள் அரசு அதிகா-ரிகள் என கூறிக்கொண்டு அதன் உரிமையாளர் சோமசுந்தரத்-திடம் ரேஷன் அரிசி பயன்படுத்துவதாக கூறி மிரட்டி, 50,000 ரூபாய் பெற்றுசென்றது ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து, வழக்-குப்பதிவு செய்ய
அந்த இருகுற்றவாளிகளையும் எலச்சிபா-ளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். எலச்சிபா-ளையம் போலீசார், சேலம்
மத்திய சிறையில் அடைத்தனர்.