ADDED : நவ 28, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலியில் செயல்பட்டு வந்த ஒரு சாய ஆலையில் இருந்து சுத்திகரிக்காமல் வெளியேற்றிய சாயக்கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து புகாரை அடுத்து வருவாய்துறை, நீர் வளத்துறை, மின்வாரியம், பள்ளிப்பாளையம் யூனியன், பஞ்., அதிகாரிகள்
அடங்கிய குழு-வினர், சம்பந்தப்பட்ட சாய ஆலை மீது, 2 மாதத்திற்கு முன்பே நடவடிக்கை எடுத்து மின்
இணைப்பை துண்டித்தனர். இந்த சாய ஆலையில், நேற்று திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி ஆய்வு செய்தார்.