/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பால் 2 கட்டணம் செலுத்தும் சேலம் பயணிகள்
/
புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பால் 2 கட்டணம் செலுத்தும் சேலம் பயணிகள்
புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பால் 2 கட்டணம் செலுத்தும் சேலம் பயணிகள்
புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பால் 2 கட்டணம் செலுத்தும் சேலம் பயணிகள்
ADDED : நவ 21, 2024 05:59 AM
நாமக்கல்: நாமக்கல், முதலைப்பட்டியில், 12.90 ஏக்கர் நிலத்தில், கடந்த, 22ல் முதல்வர் ஸ்டாலின், புதிய பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்தார். இந்த பஸ் ஸ்டாண்டில், சேலம், திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன. அதேபோல், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன், சேலத்தில் இருந்து நாமக்கல், திருச்சி, கரூர் செல்லும் பஸ்கள், நாமக்கல் வருவதற்கு கட்டணமாக, அரசு மப்சல் பஸ்சில், 45 ரூபாய், தனியார் பஸ்சில், 36 ரூபாய் பயணிகளிடம் வசூலிக்கப்-பட்டது. அதேபோல், சேலம் சீலநாய்க்கன்பட்டி புறவழிச்சா-லையில் இருந்து, நாமக்கல் செல்ல, 'மப்சல்' பஸ்சில், 40 ரூபாய், தனியார் பஸ்சில், 31 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்-போது, புதிய பஸ் ஸ்டாண்ட் திறந்த பின், சேலத்தில் இருந்து நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்களில், அதே கட்-டணம் வசூலிக்கப்படுகிறது. அங்கிருந்து, பழைய பஸ் ஸ்டாண்-டிற்கு செல்ல, பயணிகள் பஸ், மப்சல் பஸ்சில், 10 ரூபாய், டவுன் பஸ்சில், 7 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டு கட்-டணம் வசூலிப்பதால், பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து, பஸ் பயணிகள் கூறியதாவது: புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பதற்கு முன், சேலத்தில் இருந்து நேராக பழைய பஸ் ஸ்டாண்ட் வந்துவிடுவோம். அப்போது, ஒரே கட்டணம் வசூல் செய்யப்பட்டது. தற்போது, புதிய பஸ் ஸ்டாண்ட் வரை அதே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அங்கிருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு தனியாக கட்டணம் வசூல் செய்கின்றனர். கிலோ மீட்டரை கணக்கிட்டு கட்டணம் வசூல் செய்ய நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.