/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
41 மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
/
41 மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
ADDED : அக் 13, 2025 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்:நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், பாக முகவர்களின் குடும்பத்தில், உயர்கல்வி படிக்கும் வாரிசுகளுக்கு (மாணவ, மாணவியர்) கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., தலைமை வகித்து, 41 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பேசினார்.
எம்.எல்.ஏ., ராமலிங்கம், நகர செயலாளர்கள் பூபதி, ராணாஆனந்த், சிவக்குமார், மேயர் கலாநிதி, ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், பாலசுப்ரமணியன், ஜெகநாதன், சார்பு அணி நிர்வாகிகள் கிருபாகரன், பொன்சித்தார்த் உள்பட பலர் பங்கேற்றனர்.