/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நகை, பணம் திருட்டு ;போலீசார் விசாரணை
/
நகை, பணம் திருட்டு ;போலீசார் விசாரணை
ADDED : அக் 13, 2025 02:05 AM
மல்லசமுத்திரம்:திருச்செங்கோடு அருகே, சின்னதம்பிபாளையம், பாப்பாங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன், 81, பெரியம்மாள், 76, தம்பதியர். நேற்று முன்தினம் இரவு, இருவரும் வீட்டில் துாங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு, 2:00 மணியளவில் நாய் குரைக்கும் சத்தம்கேட்டு எழுந்து பார்த்துள்ளனர்.
அப்போது, முகமூடி அணிந்த, மூன்று பேர் திடீரென அவர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்துள்ளனர். இதில் மயக்கமடைந்த தம்பதியினர், நேற்று காலை, 7:30 மணிக்கு எழுந்து பார்த்தபோது மேஜை டிராயரில் இருந்த, ஒரு பவுன் மோதிரம், 5,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, தம்பதியர் அளித்த புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார், முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.