/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., சார்பில் மாணவர்களுக்கு உதவித்தொகை
/
தி.மு.க., சார்பில் மாணவர்களுக்கு உதவித்தொகை
ADDED : மார் 05, 2024 12:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: சேந்தமங்கலத்தில், தி.மு.க., நிர்வாகிகள் குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை, மறைந்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், திருச்சி சிவா, அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்.,ல், 12 மாணவ, மாணவியருக்கு, தலா, ஒரு லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை, 66 பேருக்கு குடும்ப நலநிதி, 10,000 ரூபாய் ஆகியவை வழங்கினார். டவுன் பஞ்., செயலாளர் தனபால், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

