/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் உழவர் சந்தையில் 25 டன் காய்கறி விற்பனை
/
நாமக்கல் உழவர் சந்தையில் 25 டன் காய்கறி விற்பனை
ADDED : செப் 09, 2024 06:51 AM
நாமக்கல்: நாமக்கல் கோட்டை மெயின் சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும் காலை, 5:00 முதல், 10:00 மணி வரை செயல்படும் இங்கு, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம். அதன்படி, ஞாயிற்றுக்கிழமையான நேற்று, 157 விவசாயிகள், 21,155 கிலோ காய்கறி, 3,805 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள், இதர காய்கறிகள், 250 கிலோ என, மொத்தம், 25,230 கிலோ எடையுள்ள விளைபொருட்களை, உழவர் சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்தனர்.
அவற்றை, 5,046 நுகர்வோர் வங்கி சென்றனர். இதன் மூலம் மொத்தம், 8 லட்சத்து, 98,135 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி ஒரு கிலோ, 24 ரூபாய், கத்தரி, 50 ரூபாய், வெண்டை, 18 ரூபாய், சின்ன வெங்காயம், 38 ரூபாய், பெரிய வெங்காயம், 58 ரூபாய், இஞ்சி, 100 ரூபாய்க்கு விற்பனையானது.