sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல்லில் சமூக நலத்துறை சார்பில் கருத்தரங்கம்

/

நாமக்கல்லில் சமூக நலத்துறை சார்பில் கருத்தரங்கம்

நாமக்கல்லில் சமூக நலத்துறை சார்பில் கருத்தரங்கம்

நாமக்கல்லில் சமூக நலத்துறை சார்பில் கருத்தரங்கம்


ADDED : அக் 11, 2024 01:00 AM

Google News

ADDED : அக் 11, 2024 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்லில் சமூக நலத்துறை சார்பில் கருத்தரங்கம்

நாமக்கல், அக். 11-

சமூக நலத்துறை சார்பில், தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நேற்று நடந்தது.

நாமக்கல் கலெக்டர் உமா, பேசியதாவது: சமூக நலத்துறை சார்பில், பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களுக்கு பொருளாதார உதவி, பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிட மானியத்துடன் தொழில் கடனுதவி, திருமண நிதியுதவி, பின்தங்கிய விதவைகள், ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வளரிளம் பெண்கள், மாற்றுத்திறனுடைய பெண்கள் தங்கி பயில சேவை இல்லங்கள், பணிபுரியும் பெண்களுக்கு அரசு பணிபுரியும் மகளிர் விடுதி, மகளிருக்கு தோழி அரசு மகளிர் தங்கும் விடுதி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தோழி அரசு மகளிர் தங்கும் விடுதியில் தங்கிட tnwwcl.in இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர இ-சேவை மையம், கைபேசி அல்லது கணினி மூலமாக www.en.widowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பெண்கள் தங்கள் திறமையை மேம்படுத்தி கொண்டு தொழில் முனைவோர்களாக உருவாகி பலருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

மகளிர் திட்டம் இயக்குனர் செல்வராசு, சமூக நல அலுவலர் காயத்திரி, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சகுந்தலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொ) ராஜேஸ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us