/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஞ்., தேர்தலை நடத்த கையெழுத்து இயக்கம்
/
பஞ்., தேர்தலை நடத்த கையெழுத்து இயக்கம்
ADDED : டிச 14, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஞ்., தேர்தலை நடத்த கையெழுத்து இயக்கம்
எருமப்பட்டி,
எருமப்பட்டி யூனியன், முத்துக்காப்பட்டி பஞ்சாயத்தில், 'இந்திய அரசியல் சட்டப்பிரிவு 243ஈ-ன் படி, ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம், 5 ஆண்டுகள் முடியும் முன் உள்ளாட்சி தேர்தல் நடத்த மத்திய, மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி பஞ்., அலுவலகம் முன், தலைவர் அருள்ராஜேஸ் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில், முத்துக்காப்பட்டியை சேர்ந்த ஏராளமானோர், பஞ்., தலைவர்களின் பதவிக்காலம் முடியும் முன், உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி கையெழுத்திட்டனர்.