ADDED : மே 24, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்:நாமக்கல் மாவட்டம், மோகனுாரை சேர்ந்தவர் மணிகண்டன், 42; பாண்டமங்கலம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தார்.
இவர், 15 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் புகாரளித்தனர்.
ப.வேலுார் மகளிர் போலீசார், மணிகண்டன் மீது போக்சோ வழக்குப்பதிந்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.