/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.13.36 லட்சத்திற்கு விற்பனை
/
நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.13.36 லட்சத்திற்கு விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.13.36 லட்சத்திற்கு விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.13.36 லட்சத்திற்கு விற்பனை
ADDED : டிச 09, 2024 07:06 AM
நாமக்கல்: நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை செயல்படும் உழவர் சந்தையில், நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள், பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து அவற்றை வாங்கிச் செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்குதேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.
தற்போது, கார்த்திகை மாதம் துவங்கியுள்ளதால், ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக விரதம் மேற்கொள்ளும் பலர், அசைவத்தை கைவிட்டு, சைவத்திற்கு மாறியுள்ளனர். இதனால், நேற்று வழக்கத்தை விட உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 182 விவசாயிகள் காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்தம், 25,085 கிலோ காய்கறிகள் மற்றும் 5,720 கிலோ பழங்கள், 15 கிலோ பூக்கள் என மொத்தம், 30,820 கிலோ எடையுள்ள விளை பொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றை, 6,164 பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதன் மூலம், 13 லட்சத்து, 36,600 ரூபாய்க்கு விற்பனையானது.