/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பக்த ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேகம்
/
பக்த ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேகம்
ADDED : ஏப் 06, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பக்த ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேகம்
சேந்தமங்கலம்:நாமக்கல் அருகே, மரூர்பட்டியில் பெரியமலை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பங்குனி சனிக்கிழமையான நேற்று, பெரியமலை அடிவாரத்தில் உள்ள பக்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 21 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, பக்த ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், மலை உச்சியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு, அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.