sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வரும் 12ல் இ.பி.எஸ்., பிறந்த நாள் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

/

வரும் 12ல் இ.பி.எஸ்., பிறந்த நாள் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

வரும் 12ல் இ.பி.எஸ்., பிறந்த நாள் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

வரும் 12ல் இ.பி.எஸ்., பிறந்த நாள் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை


ADDED : மே 10, 2025 01:13 AM

Google News

ADDED : மே 10, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், மாநகர அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாநகர செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பாஸ்கர் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், முன்னாள் மாவட்ட பஞ்., தலைவர் காந்திமுருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வரும், 12ல், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பிறந்த நாளை, நாமக்கல் நகரில் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மாநகர செயலாளர் பாஸ்கர் தலைமையில், நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, பொதுமக்களுக்கு, அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதேபோல், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், தங்க தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அன்றைய தினம், இந்திய ராணுவ வீரர்களுக்கு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாமக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் சேகர், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா செல்வகுமார், புதுச்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாத், மோகனுார் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மோகனுார் நகர செயலாளர் ராஜவடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us