sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலை அனைத்து வணிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

/

கொல்லிமலை அனைத்து வணிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

கொல்லிமலை அனைத்து வணிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

கொல்லிமலை அனைத்து வணிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்


ADDED : நவ 26, 2025 01:39 AM

Google News

ADDED : நவ 26, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், இணைப்பு சங்கமான கொல்லிமலை அனைத்து வணிகர் நலச்சங்கம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில், சிறப்பு பயிற்சி முகாம், கொல்லிமலை ஒன்றியம், செம்மேட்டில் நடந்தது. கொல்லிமலை அனைத்து வணிகர் நலச்சங்க தலைவர் வருணன் தலைமை வகித்தார். செயலாளர் பூபதி வரவேற்றார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், முகாமை துவக்கி வைத்து பேசினார்.

அப்போது, ''உணவு பாதுகாப்புத்துறை சட்டங்களை புரிந்துகொண்டு, பாதுகாப்புடன் வணிகம் செய்ய வேண்டும். அனைத்து வணிகர்களும், வரும், 30க்குள், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில், கட்டணமில்லாமல் உறுப்பினர்களாக இணைந்து பயன்பெற வேண்டும்,'' என்றார். உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா, 'போஸ்டாக்' சான்றிதழ் பெறுவதன் அவசியம் குறித்தும், உணவு பாதுகாப்பு சட்டங்கள் பற்றியும் விளக்கினார்.

பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார், துணை தலைவர் உதயகுமார், ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், பொருளாளர் தென்னவன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us