/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கந்தசாமி கோவிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு
/
கந்தசாமி கோவிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு
ADDED : செப் 29, 2025 01:53 AM
மல்லசமுத்திரம்:சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் பிரசித்திபெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. புரட்டாசி சஷ்டியையொட்டி, நேற்று காலை, 6:00 மணி முதல் மாலை வரை மூலவருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், விபூதி, இளநீர், கரும்புச்சாறு, திருமஞ்ஞனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை நடந்தது.
கோவில் முழுவதும் பலவகையான வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவில் உட்பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சேலம், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, திருச்சி என, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.