sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சீனிவாச கல்யாண வைபவம்

/

சீனிவாச கல்யாண வைபவம்

சீனிவாச கல்யாண வைபவம்

சீனிவாச கல்யாண வைபவம்


ADDED : அக் 06, 2025 04:17 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: மோகனுார் காவிரி ஆற்றங்கரையில், பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் சுவாமி கோவில் உள்ளது. இங்கு சுவாமி, பத்மாவதி தாயார் சமேதராக எழுந்தருளி பக்தர்க-ளுக்கு அருள்பாலிக்கின்றார். இக்கோவிலில், நேற்று சீனிவாச கல்-யாண வைபவம் சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு, மூலவர் வெங்கடாஜலபதி அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷ ஆராதனை, தீபாராதனை நடந்தது.

மாலை, 5:30 மணிக்கு, சீனிவாச கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இரவு, 8:30 மணிக்கு, தீபாராதனை சுவாமி உட்பிரகார புறப்பாடும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளியறை சேவையும் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us