sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாணவிக்கு பாலியல் தொல்லை கைதான எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

/

மாணவிக்கு பாலியல் தொல்லை கைதான எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

மாணவிக்கு பாலியல் தொல்லை கைதான எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

மாணவிக்கு பாலியல் தொல்லை கைதான எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'


ADDED : ஆக 14, 2025 02:47 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான, கொல்லிமலை வாழவந்திநாடு போலீஸ் எஸ்.எஸ்.ஐ.,யை சஸ்பெண்ட் செய்து, நாமக்கல் எஸ்.பி., விமலா உத்தரவிட்டார்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த ஆயில்பட்டியை சேர்ந்தவர் மோகன், 54; கொல்லிமலை, வாழவந்திநாடு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ., இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். வாழவந்திநாடு போலீசாருக்கு, கொல்லிமலையை சேர்ந்த ஒருவர் சமையல் செய்து கொடுத்து வருகிறார்.

சமையலரின், 19 வயது மகள், திண்டுக்கல் தனியார் கல்லுாரியில், இரண்டாமாண்டு பி.எஸ்சி., படித்து வருகிறார். கடந்த, 6ல், திண்டுக்கல் செல்வதற்காக புறப்பட்ட மாணவி மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரையும், எஸ்.எஸ்.ஐ., மோகன், தன் காரில் அழைத்து சென்றுள்ளார். அப்போது, முள்ளுக்குறிச்சி

யில் மாணவியின் தந்தை இறங்கிய நிலையில், தனியாக இருந்த மாணவியிடம், எஸ்.எஸ்.ஐ., மோகன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த மாணவி, கடந்த, 11ல், நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்படி, இன்ஸ்பெக்டர் வேதபிறவி, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட எஸ்.எஸ்.ஐ., மோகனை கைது செய்தார். இந்நிலையில், மோகனை, நாமக்கல் எஸ்.பி., விமலா 'சஸ்பெண்ட்' செய்து

உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us