/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மா.கம்யூ., சார்பில் தெருமுனை பிரசாரம்
/
மா.கம்யூ., சார்பில் தெருமுனை பிரசாரம்
ADDED : அக் 06, 2025 04:15 AM
குமாரபாளையம்: மா.கம்யூ., கட்சி சார்பில், நாமக்கல் மாவட்ட மக்கள் கோரிக்கை தொழில் பாதுகாப்பு சிறப்பு மாநாடு, வரும், 12ல் நாமக்-கல்லில் நடக்க உள்ளது.
இதை விளக்கி, தெருமுனை பிரசார கூட்டம், குமாரபாளையம்--ஆனங்கூர் பிரிவு சாலையில், நகர செயலர் கந்தசாமி தலை-மையில் நடந்தது. அதில், விசைத்தறி தொழிலையும், தொழிலா-ளர்களையும் பாதுகாக்க வேண்டும்; குமார
பாளையம் மக்களுக்கு, புளியம்பட்டி கதவணையிலிருந்து தண்ணீர் எடுத்து, துாய்மையான குடிநீர் வழங்க வேண்டும்;
வீட்டுமனை இல்லாத நபர்களுக்கு, வீட்டுமனை
இலவச பட்டாக்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல், முன்னாள் நகர செயலாளர் ஆறு-முகம், நகர குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த தெருமுனை பிரசார கூட்டம், பள்ளிப்பாளையம் சாலை, பஸ் ஸ்டாண்ட், சின்னப்பநாயக்கன்பாளையம், காவேரி நகர் உள்-ளிட்ட பகுதிகளில் நடந்தது.