sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை: வேளாண் இணை இயக்குனர்

/

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை: வேளாண் இணை இயக்குனர்

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை: வேளாண் இணை இயக்குனர்

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை: வேளாண் இணை இயக்குனர்


ADDED : நவ 08, 2024 01:25 AM

Google News

ADDED : நவ 08, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும்

நடவடிக்கை: வேளாண் இணை இயக்குனர்

நாமக்கல், நவ. 8-

நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொ) வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், 5,969 ெஹக்டர் நெற்பயிர், 64,926 ெஹக்டர் சிறுதானிய பயிர்கள், 9,663 ெஹக்டர் பயறுவகை பயிர்கள், 1,598 ெஹக்டர் பருத்தி பயிர், 7,798 ெஹக்டர் கரும்பு பயிர் மற்றும் 27,849 ெஹக்டர் எண்ணெய் வித்து பயிர் என மொத்தம், 1,17,803 ெஹக்டர் பரப்பளவில் பயிர் சாகுபடி நடந்து வருகிறது.

இதற்கு தேவையான ரசாயன உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. உரம் இருப்பில் யூரியா, 2,394 மெட்ரிக் டன், டி.ஏ.பி., 1,497 மெட்ரிக் டன், பொட்டாஷ், 1,230 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரங்கள், 2,725 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்கள், 388 என்ற அளவில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உரம் வினியோகம் மற்றும் இருப்பை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான, நிலையான கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், உரங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, கூடுதலாக விற்பனை செய்ய கூடாது. சரியான அளவில் உரம் வினியோகம் செய்ய வெண்டும். விவசாயிகள் உரம் வாங்க செல்லும் போது, ஆதார் அட்டையை கொண்டு சென்று பட்டியலிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us