/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி துாக்கிட்டு தற்கொலை
/
குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி துாக்கிட்டு தற்கொலை
குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி துாக்கிட்டு தற்கொலை
குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜூன் 09, 2025 04:30 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, செண்பகமாதேவி கிராமம், தேவேந்தி-ரர்தெரு பகுதியை சேர்ந்தவர் வடிவேல், சந்திரா தம்பதியர்; கூலி-தொழில் செய்து வருகின்றனர். இவர்களது, 3வது மகள் தீபிகா, 17, மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம், மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். காலை, 10:30 மணிக்கு பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டர். மதியம், 2:00 மணிக்கு, மாணவியினின் தொலைபேசிக்கு பெற்றோர் அலைத்துள்ளனர். மாணவி தொலைபேசியை எடுக்கவில்லை.
இதனால், சந்தேகமடைந்து பக்கத்துவீட்டு சிறுவனின் தொலை-பேசியில் அலைத்து வீட்டில் சென்று மாணவியை பார்க்கும்படி கூறியுள்ளனர். சிறுவன் சென்று பார்த்தபோது கதவு தாழ்பால் போட்டிருந்தது. நீண்டநேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதுகுறித்து, சிறுவன் அப்பெற்றோருக்கு தகவல் கொடுத்-துள்ளார். உடனடியாக பெற்றோர் வீட்டிற்குவந்து கதவை உடைத்து பார்த்தபோது, தீபிகா அவரது தாயின் சேலையால் வீட்டின் முற்றத்தில் துாக்கிட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து, மல்லசமுத்திரம் போலீசார் விசாரணையில், பத்தாம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் துாக்கிட்டு தற்-கொலை செய்தது தெரியவந்தது.