/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாணவருக்கு தொந்தரவு விடுதி வார்டனுக்கு 'காப்பு'
/
மாணவருக்கு தொந்தரவு விடுதி வார்டனுக்கு 'காப்பு'
ADDED : ஏப் 17, 2025 02:13 AM
மோகனுார்:ஒன்பதாம் வகுப்பு மாணவருக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த, தனியார் மெட்ரிக் பள்ளி விடுதி வார்டனை, 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகாவை சேர்ந்த, 14 வயது மாணவர், நாமக்கல் மாவட்டம், மோகனுார் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார். இங்கு, விடுதி வார்டனாக, எருமப்பட்டி அடுத்த திப்ரமாதேவியை சேர்ந்த வினோத் பணியாற்றி வந்தார்.
விடுதியில் தங்கி படித்த மாணவரை, 2024 ஆக., 4ல், இரவு, 11:00 மணிக்கு, வினோத், தன் அறைக்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதேபோல், ஏப்., 3 இரவு, 11:00 மணிக்கு, மாணவரை தண்டனை எனக்கூறி, மீண்டும் தன் அறைக்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவர் பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், மோகனுார் போலீசில் புகாரளித்தனர். போலீசார், வினோத் மீது, 'போக்சோ' வழக்கு பதிந்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.