sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முதுநிலை நீட் தேர்வு ரத்து மாணவர்கள் ஏமாற்றம்

/

முதுநிலை நீட் தேர்வு ரத்து மாணவர்கள் ஏமாற்றம்

முதுநிலை நீட் தேர்வு ரத்து மாணவர்கள் ஏமாற்றம்

முதுநிலை நீட் தேர்வு ரத்து மாணவர்கள் ஏமாற்றம்


ADDED : ஜூன் 16, 2025 07:31 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: நாடு முழுவதும், நேற்று முதுநிலை நீட் தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். நாடு முழுவதும், 195 நகரங்களில், 447 மையங்களில் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை, 9:00 மணி மற்றும் மாலை, 3:30 மணி ஆகிய இரண்டு ஷிப்டுகளாக தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இரண்டு ஷிப்டுகளாக தேர்வு நடப்பதால் கடினமான கேள்வித்தாள் வரும். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது முறைப்படி என்.டி.ஏ., வெப்சைட்டில் வெளியிடப்பட்டிருந்தது. இதை கவனிக்காத சில மருத்துவ மாணவர்கள், நேற்று காலை ராசிபுரம் அடுத்த தனியார் கல்லுாரி தேர்வு மையத்திற் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேபோல், பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீசாரும் யாரும் வராததை பார்த்து ஏமாற்றமடைந்தனர். அதன்பிறகுதான் தேர்வு ரத்தானது தெரிந்தது. இதையடுத்து போலீசாரும் திரும்பி சென்றனர்.






      Dinamalar
      Follow us