sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மோகனுார் சர்க்கரை ஆலை அரவைக்கு கரும்புகள் வெட்டும் பணி தீவிரம்

/

மோகனுார் சர்க்கரை ஆலை அரவைக்கு கரும்புகள் வெட்டும் பணி தீவிரம்

மோகனுார் சர்க்கரை ஆலை அரவைக்கு கரும்புகள் வெட்டும் பணி தீவிரம்

மோகனுார் சர்க்கரை ஆலை அரவைக்கு கரும்புகள் வெட்டும் பணி தீவிரம்


ADDED : டிச 23, 2024 09:14 AM

Google News

ADDED : டிச 23, 2024 09:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அரவை துவங்கியுள்ளதால் சேந்தமங்கலம் பகுதியில் கரும்புகளை வெட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.

மோகனுாரில் பழமை வாய்ந்த, சேலம் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. ஆண்டு தோறும் சீசன் காலங்களில் சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. இந்தாண்டுக்கான கரும்பு அரவை கடந்த மாதம் துவங்கியது. இதையடுத்து, சர்க்கரை ஆலையில் பதிவு செய்யப்பட்டிருந்த கரும்புகளை வெட்டும் பணி, பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, காரவள்ளி விவசாயிகள், மோகனுாரில் உள்ள ஆலையில் கரும்புகளை அரவைக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது பதிவு செய்யப்பட்டிருந்த கரும்புகளை ஆலைக்கு அனுப்புவதற்காக வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கரும்புக்கு டன் ஒன்றுக்கு வெட்டு கூலியை சேர்த்து, 3,150 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர். ஆண்டு முழுவதும் வளர்த்து வெட்டும் கரும்புக்கு உரிய பராமரிப்பு செலவு கூட இல்லாத நிலை உள்ளது என, விவசாயிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us