/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருவள்ளுவர் தினம் இனிப்பு வழங்கல்
/
திருவள்ளுவர் தினம் இனிப்பு வழங்கல்
ADDED : ஜன 16, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோகனுார்: மோகனுார் திருவள்ளுவர் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, திருவள்ளுவர் தினமான நேற்று, மன்றம் சார்பில் வள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
விழாவை முன்னிட்டு, மோகனுார் டவுன் பஞ்., அலுவலகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மோகனுார் டவுன் பஞ்., தி.மு.க., செயலாளர் செல்லவேல் தலைமை வகித்தார். மன்ற நிர்வாகிகள் சிவசண்முகம், யசோதை கண்ணன், கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

