sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கஞ்சா விற்பனையில் தமிழகம் முன்னிலை: தங்கமணி பேச்சு

/

கஞ்சா விற்பனையில் தமிழகம் முன்னிலை: தங்கமணி பேச்சு

கஞ்சா விற்பனையில் தமிழகம் முன்னிலை: தங்கமணி பேச்சு

கஞ்சா விற்பனையில் தமிழகம் முன்னிலை: தங்கமணி பேச்சு


ADDED : நவ 19, 2024 01:56 AM

Google News

ADDED : நவ 19, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



சேந்தமங்கலம், நவ. 19-

''இந்தியாவில் கஞ்சா விற்பனையில், தமிழகம் முன்னிலையில் உள்ளது,'' என, சேந்தமங்கலத்தில் நடந்த, அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். சேந்தமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், நேற்று செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். பேரூர் கழக செயலாளர் ஆனந்த்குமார் முன்னிலை வகித்தார். அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி கலந்துகொண்டார்.

அவர் பேசுகையில், ''வரும் சட்டசபை தேர்தலில் கடுமையாக உழைத்து, அ.தி.மு.க.,விற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு, அண்டை மாநிலமான பீஹார் மாநிலத்தில் அரசு நிதியுதவி தர முடியாது என கை விரித்துள்ளது. இதேபோல், பிற மாநிலங்களிலும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். தற்போது, சொந்த இடத்தில் இருந்து மண் எடுத்து சென்றாலும், தி.மு.க., ஆதரவாளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவிலேயே, கஞ்சா விற்பனையில் தமிழகம் முன்னிலை மாநிலமாக உள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us