sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு

/

அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு

அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு

அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு


ADDED : அக் 20, 2024 04:16 AM

Google News

ADDED : அக் 20, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தமிழகக்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அக-விலைப்படி உயர்வு அளித்த அறிவிப்பை, ஆசிரியர்கள் சங்கத்-தினர் வரவேற்றுள்ளனர்.

இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு பணியாளர்களுக்கு, கடந்த ஜூலை, 1 முதல், 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 53 சதவீதமாக உயர்த்தப்பட்-டுள்ளது. இந்நிலையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த ஜூலை, 1 முதல், மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப்-படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதனால், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, 50 சதவீ-தமாக உள்ள அகவிலைப்படி, 3 சதவீதம் உயர்ந்து, 53 சதவீத-மாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவர்.

இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதுடன், அரசின் உத்த-ரவை வரவேற்கிறோம். மேலும், மத்திய அரசு, 2025, ஏப்., முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதேபோல், விரைவில் தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கவும், உயர்கல்விக்கான ஊக்கத் தொகையை வழங்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க-வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us