sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்'

/

'ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்'

'ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்'

'ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்'


ADDED : நவ 19, 2025 02:07 AM

Google News

ADDED : நவ 19, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், கொல்லிமலை தாலுகா, ஆரியூர் புதுவளவு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி, ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, அவர் பேசியதாவது:

கல்வி மற்றும் ஒழுக்கத்தை, இரு கண்களாக மாணவ, மாணவியர் கருத வேண்டும். நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதுடன், உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து, மலைவாழ் பகுதியில் வாழக்கூடிய மாணவர்கள் வாழ்வில் மேம்பட வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசு இலவச சைக்கிள் வழங்குவதுடன், 'நான் முதல்வன்', 'புதுமைப் பெண்', 'தமிழ் புதல்வன்' போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து

வருகிறது.

அவற்றை முறையாக மாணவர்கள் பயன்படுத்தி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு உற்ற துணையாக இருந்து, வழிகாட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, 'போதையில்லா' இந்தியா- விழிப்புணர்வு உறுதி மொழியை, முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி தலைமையில், மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் எடுத்துக்கொண்டனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வருகையையொட்டி, மரக்கன்று நட்டு வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் காளிதாஸ், அரசு மாதிரி மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் வரதராஜ், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us